சட்டவிரோதமாக சாராயம் விற்கப்படுவது பற்றி தெரியவந்தால் இளைஞர்கள் அது பற்றி அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் தங்கும் அறையினை திறந்து வைத்த பின் பேட்டியளித்த அமைச்சர், விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது மனிதாபிமான அடிப்படையில் தான் என்று கூறினார்.